கண்டிப்பாய் பகிர வேண்டிய தகவல். Please share.
அடையாறு கேன்சர் மருத்துவமனை "Imitinef Mercilet" என்ற கேன்சரை குணப்படுத்தும் மருந்தை இலவசமாய் தருகிறது என்றும் இதை பயன்படுத்தினால் அனைத்து வகை கேன்சரில் இருந்தும் விடுபடலாம் என்றும் ஒரு தகவல் இணையத்தில் புரையோடிக் கிடக்கிறது.
முதலில் ஒரு சிறு விளக்கம். அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரில் மருந்து ஒன்றுமே கிடையாது. அந்த மருந்தின் பெயர் "Imatinib Mesylate." இந்த மருந்து Chronic Myelogenous Leukemia (CML), சில வகையான வயிற்றுதசைகளில் வரும் கேன்சர்கள், மற்றும் சில குறிப்பிட்ட வகை கேன்சர்களுக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த மருந்தும் இந்த கேன்சர்களை குணப்படுத்துவதில்லை. கட்டுப்படுத்த மட்டுமே செய்கிறது. மருந்து போக அறுவை சிகிச்சை, ரேடியோதெரபி மற்றும் வேறு சில மருந்துகளோடு சேர்ந்து கேன்சரை கட்டுப்படுத்தலாம். ஆரம்பகட்ட நிலையிலேயே கேன்சர் இருப்பதை கண்டு கொண்டால் குணப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் இத்தகைய தப்பான தகவலை பயன்படுத்துவதால் என்னாகும்?
1. ஒரு கேன்சர் நோயாளிக்கு தவறான வழி காட்டப்படுகிறது. அதை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் உண்மை நிலை தெரிய வரும் போது அவர்களுக்கு மருத்துவர்கள் மேல், மருத்துவ சிகிச்சைகளின் மேல், இந்த செய்தியை பகிர்ந்து கொண்டவர்கள் மேல் அவநம்பிக்கை ஏற்படுகிறது.
2. மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மருத்துவரும் நோயாளிக்கு நம்பிக்கையை தான் முதல் சிகிச்சையாய் வழங்குவார்கள். ஏனென்றால் மருந்துகள் 50% குணப்படுத்தும் என்றால் குணமாகும் என்ற நம்பிக்கை தான் மிச்சம் 50% குணப்படுத்தும். தவறான செய்தியால் உண்டாகும் அவநம்பிக்கை அந்த நோயாளி குணமடையும், மருத்துவத்துக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பிற்கு பெரிய தடங்கலை உண்டாக்குகிறது.
3. ஆரம்பகட்ட கேன்சரில் இருக்கும் ஒருவர் "அதுதான் மருந்து இருக்கிறதே" என்று ஏற்கனவே எடுத்துக் கொண்டு இருக்கும் மருந்தை, சிகிச்சையை மறுத்தால் என்னவாகும்? அவரது உயிர் போனால் நீங்கள் மருத்துவரை பழிசொல்வீர்களா அல்லது பகிர்ந்தவரை பழி சொல்வீர்களா?
4. அந்த மருத்துவமனையின் நிலையை யோசித்து பாருங்கள். எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் விளக்கிச் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாய் 20 அழைப்புகள் வருகின்றனவாம். இதற்கு பதில் சொல்வதா அந்த மருத்துவமனையின் வேலை.
5. அடையாறு கேன்சர் மருத்துவமனை ஏழை நோயாளிகளுக்கு இந்த மருந்தை இலவசமாகவே வழங்குகிறது. பிறர் மாதம் 8000 ரூபாய் செலுத்தி இந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இந்த சிகிச்சையை அடையாறு மருத்துவமனை மட்டுமின்றி வேறு பல கேன்சர் சிகிச்சை மையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
6. இது மட்டுமல்ல.. ஜான்சன் பேபி சோப் உபயோகித்தால் சரும நோய் வரும் என்று தாமரை மலரின் நடுப்பகுதியை ஒரு மனித உடலின் மேல் ஒட்டிய படத்தோடு கூடிய செய்தி, பொட்டாசியம் பெர்மாங்கநேட் உபயோகித்தால் பற்கள் வெண்மையாகும் என்ற செய்தி, வலது காதில் போன் பேசினால் பாதிப்புகள் என்ற செய்தி, லிப்ஸ்டிக்கில் இருக்கும் பொருளினால் கேன்சர் வரும் என்ற செய்தி போன்றவையும் போலியானவை தான்.
தயவு செய்து இதை பகிருங்கள். இல்லை இதுபோன்று தகவல்கள் எதுவும் வந்தால் கொஞ்சம் இணையத்தில் தேடிப்பார்த்து அது உண்மையா என்று கண்டறிந்து பகிருங்கள்.
அடையாறு கேன்சர் மருத்துவமனையின் விளக்கம் இந்த சுட்டியில் – http://cancerinstitutewia.in/ACI/news&events.php