பேச அசூயைப்படும் ஒரு தலைப்பை விளம்பரம் வேண்டி தேர்ந்தெடுத்த எனது மூளைக்கு ஒவ்வொரு நாளும் உண்ண வேறு வேறு புத்தகங்கள் தேவைப்படும். ஒரு நாள் உணவை நான் தராவிடில் மூளை எனது மனதை மயக்கி என் கைகளையும் கண்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து, அதன் உணவை பறித்து உண்ணும்.
அப்படிப்பட்ட ஒரு நாளில் நான் வாசிக்க நேர்ந்த புத்தகம் தான் இது. புத்தகத்தின் தமிழாக்கப்பட்ட தலைப்பு இதுவே – “பூள் முனைத்தோல் வெட்டு – உலகின் மிக சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சையின் வரலாறு.” பூள் என்பது அசூயை கொள்ள வேண்டிய ஒரு வார்த்தை அல்லவே. அது ஆணின் உடலில் இருக்கும் ஒரு பகுதி. மேல சொல்லவேண்டுமென்றால் மனித இனத்தின் இருப்பை உறுதி செய்ய பயன்படும் ஒரு கருவி எனக்கொள்ளலாம்.
ஆதி காலம் தொட்டே, பல்வேறு சமநிலைக் கலாச்சாரங்களில் இந்த முனைவெட்டு முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆதி காலத்தில், மதமும் மருத்துவமும் அறிவியலின் பாற்பட்டு விலகி வெவ்வேறு துறைகளாகும் முன்னமே, இந்த பழக்கம் இக்கலாசாரங்களில் விளங்கி வந்துள்ளது. முதன்முதல் முனைவெட்டின் ஆதாரம் ஒரு எகிப்திய கல்லறையின் மேல் வரையப்பட்ட ஒரு ஓவியமே. சக்காராவின் பெரும் இடுகாட்டில் உள்ள அன்க்மகோரின் கல்லறையின் மேல் வரையப்பட்ட பல்வேறு ஓவியங்களின் மத்தியில் காணப்படும் ஒரு ஓவியத்தில் இரு பூசாரிகள் இரு இளைஞர்களின் பிறப்புறுப்பை வெட்டும் காட்சி விளக்கப்பட்டுள்ளது.
கி.மு. 23ஆம் நூற்றாண்டில் யுஹா என்பவர் எழுதிய கூட்டு முனைவெட்டு குறித்த ஒரு அறிக்கையும் இதை உறுதி செய்கிறது. முனைவெட்டை பற்றி முப்பது பதிவுகள் போட்டு அதை விளம்பரம் செய்து புகழ் தேடும் அளவுக்கு என் மூளையின் வீச்சு மங்கி விடவில்லை. அனைவரும் போய் அந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். படிக்க பிடிக்காவிட்டால், படியுங்கள். அப்போது தான் அறிவு வளராவிட்டாலும் வரலாறாவது ஆகும்.
270 பக்கங்கள் கொண்ட இந்த நூலினை அனைவரும் படிக்க முடியா. மனித இனத்தின் பரிமாண வளர்ச்சியை அறியும் ஆவல் கொண்டோர் மட்டுமே படிக்க வேண்டிய நூல் இது. பிறரிடம் தம் அறிவை காட்டி மெச்சி கொள்ள நினைத்து சீன் போடும் என்னைப் போன்ற சிலரும் படிக்கலாம்.
என்னுடையதை மூடும் முன், உங்களுக்கு ஒரு தகவல். பெண்களுக்கும் முனைவெட்டு உண்டு வரலாறில். 1994லில் டோகோ என்ற நாட்டிலிருந்து பாவ்ஜியா கசின்ட்ஜா என்ற பெண் அமெரிக்காவிற்கு போலி கடவுச்சீட்டில் வந்தாள். அகதியாக வேண்டி விண்ணப்பித்த அவள் தெரிவித்த காரணம்: அவள் மீண்டும் அவளது நாட்டிற்கு சென்றால் அவளுக்கு அவளது பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்து அவளை ஏற்கனவே மணமாகி மூன்று மனைவிகளையுடைய வயதான ஒருவனுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். கசின்ட்ஜாவுக்கு நியாயம் கிடைக்க நேரமானது. ஆனால் அவள் மூலமாகவும், அவளுக்கு ஆதரவாகவும் பலர் வெளியே வந்தனர். அப்படி வெளியே வந்தவர் தான் வாரிஸ் டிரி. “பாலைவன மலர்கள்" என்ற பெயரில் இவர் எழுதி வெளியிட்ட நூல் பேரும் பரபரப்பை கிளப்பியது. 1999ல் பிரெஞ்சு நீதிமன்றம் ஒரு ஆப்பிரிக்க பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த பெண் செய்த குற்றம்: பத்து வயதிற்குட்பட்ட 48 பெண்களுக்கு அவர்களின் பிறப்புறுப்புகளை வெட்டியது.
மேலும் சொல்லிக்கொண்டே போகலாம். படியுங்கள். புத்தகத்தின் ஆங்கில தலைப்பு – Circumcision – A history of the World’s most controversial surgery.
மின்புத்தகம் வேண்டுமேன்போர் கூகிளில் தேடி கண்டு கொள்ளலாம். இருக்கிறது என்பது மட்டுமே நான் சொல்லும் தகவல்.
//“பூள் முனைத்தோல் வெட்டு – உலகின் மிக சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சையின் வரலாறு.” பூள் என்பது அசூயை கொள்ள வேண்டிய ஒரு வார்த்தை அல்லவே. //
http://valavu.blogspot.in/2007/04/1.html
உட்புகுந்து துருவிச் செகுத்தலை உட்செகுத்தல் (to insect) என்றே சொல்லலாம். ஏதோ ஒரு பொருளில் தோண்டிக் கொண்டு, உட்செகுத்துப் போகும் உயிரியை உட்செகுவி (= insect) என்றே ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். நாமோ, இந்த உட்செகுதல் (= பிரித்துக் கொண்டு உட்செல்லுதல்) என்னும் பொருளில் இருந்து, சற்றே மாறுபட்டு வரும் இன்னொரு வினையான பூளுதல் (= பிளத்தல்) வினையை வைத்து, பூள்ந்து போகும் insect -யை பூ(ள்)ச்சி என்றே தமிழில் சொல்லுகிறோம். பூளுதலில் இருந்து இன்னொரு பெயர்ச்சொல்லையும் பெறலாம்; ஆனால், அதை இடக்கர் அடக்குதலாய், நாகரிகம் கருதி, பொது அவையில் சொல்ல இயலாது.
அருமையான விளக்கம். பின்னூட்டத்திற்கு நன்றி.
இதுவரை இதன் பெயர்க்காரணம் தெரியவில்லை. இனிமேல் கவலையில்லை.